Thursday, January 14, 2016 - 6:15pm
இந்தியாவில் எதிர்வரும மார்ச் 08ஆம் திகதி 16 நாடுகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள ரி20 உலகக் கிண்ணத் தொடரின் உத்தியோகபூர்வ கிண்ணம் இலங்கைக்கும வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் வலம் வரும் இக்கிண்ணம், எதிர்வரும் ஜனவரி 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை இலங்கையில் காட்சிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் எதிர்வரும் 17ஆம் திகதி காலி முகத்திடலில் மக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.
கடந்த 2014 இல் பங்களாதேஷில் இடம்பெற்ற இத்தொடரின் கிண்ணத்தை இலங்கை அணி சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கிண்ணத்திற்கான தொடர் கடந்த 2007 முதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Add new comment