மெனிங் சந்தைக்கு விரைவில் பூட்டு

கொழும்பு புறக்கோட்டையில் உள்ள மெனிங் சந்தையை அங்கிருந்து அகற்ற அமைச்சரவையால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
அமைச்சரவையின் இணை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (14) இதனைத் தெரிவித்தார்.
 
2008ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கொழும்பு புறக்கோட்டையை புதிய நகராக அபிவிருத்தி செய்யவுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
 
புறக்கோட்டையிலுள்ள மெனிங் சந்தை, நகர திட்டமிடல் அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 25 ஏக்கர் காணியில் ரூபா 4 பில்லியன் செலவில் புதிய மெனிங் பொது சந்தையை நிர்மானிக்கவுள்ளதாகவும்,அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
 
இதன் அடிப்படையிலேயே மீன் சந்தையும் பேலியகொடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Add new comment

Or log in with...