தங்க கடத்தல்; உதவிய அதிகாரியும் கைது (Photo)

மலேசியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்த தங்க நகைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9172","attributes":{"alt":"","class":"media-image","height":"464","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
காத்தான்குடியைச் சேர்ந்த குறித்த நபருக்கு உதவி செய்ததாக தெரிவிக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையக குடிவரவு, குடியகல்வு அதிகாரி ஒருவரும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்கம் அறிவித்துள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9173","attributes":{"alt":"","class":"media-image","height":"366","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
இதன்போது குறித்த நபரிடமிருந்து, 392 தங்க மாலைகள் மற்றும் 18 தங்க பிஸ்கட்டுகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5.1 கிலோ கிராம் நிறையுடைய, இவற்றின் பெறுமதி ரூபா 2 கோடி 70 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Add new comment

Or log in with...