Wednesday, January 6, 2016 - 5:45pm
தெமட்டகொடையில் இடம்பெற்ற துணி வியாபாரியின் கடத்தல் சம்பவம் தொடர்பில் 08 பேரை இனங்காணும் அடையாள அணிவகுப்பில் குறித்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் மிஹாரின் முன்னிலையில் இன்று (06) குறித்த நபர்கள் சாட்சியாளர்களால் அடையாளம்காணப்பட்டனர்.
இதன் அடிப்படையில், ஹிருணிகா பிரேமச்சந்திரன் எம்.பியின் உதவியாளர்கள் எனக் கூறப்படும் குறித்த 08 பேரும், தலா ரூபா ஒரு இலட்சம் பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதன்போது, குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் பூரணமாக முடிவடைந்துள்ள நிலையில் உள்ளதாக, கொழும்பு குற்றவியல் பிரிவினரால், நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Add new comment