Monday, January 4, 2016 - 12:45pm
அவன் காட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (04) ஆஜரானார்.
அவன் காட் நிறுவனம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்கு மூலமொன்றை வழங்கும் பொருட்டே அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, இலஞ்ச, ஊழல் தொடர்பான விசாரணை செய்யும் ஆணைக்குழுவில், முன்னாள் தூதுவரும் (நைஜீரியா) காணி வர்த்தகருமான ஏ.எஸ்.பி. லியனகே இன்று (04) ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து இராஜகிரியவிலுள்ள, பீகொக் மாளிகையை அவருக்கு பரிசாக வழங்குவதாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தமை தொடர்பில், வாக்குமூலமொன்றை பெறுவதற்காகவே, ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
Add new comment