சொத்து மதிப்பை வழங்கவில்லை; வழக்கு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
 
2013ம் 2014ம் ஆண்டுகளில் துமிந்த சில்வா, தனது அசையும் மற்றும் அசையா சொத்துகள் தொடர்பான விபரங்களை வழங்காமை குறித்தே, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.
 
குறித்த வழக்குகள் இன்றைய தினம் (28) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட இராணுவ அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.
 
அத்துடன் குறித்த வழக்கைப் பதிவு செய்த நீதிமன்றம், துமிந்த சில்வாவுக்கு அழைப்பாணை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...