Tuesday, December 22, 2015 - 10:15am
இங்கிரிய நகரிலுள்ள பாதணி வர்த்தக நிலையமொன்றில் தனது 4 வயது குழந்தையைக் கொண்டு களவாடிய சந்தேகத்தின் அடிப்படையில் தாய் மற்றும் அவரது மகள்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொஸ்கம பிரதேசத்தில் கைதான இவர்கள், கொஸ்கம பொலிஸாரால் இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
களவில் ஈடுபடும்போது குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கமெராவில் (CCTV) அக்காட்சிகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
களவாடப்பட்டதாக தெரிவிக்கப்படும் ரூபா 55,000 பணத்தில் ரூபா 15,000 இனை குறித்த வீட்டின் தலையணைக்குள் இருந்து மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
There is 1 Comment
குழந்தையை வைத்து விளையாடலாம்
Add new comment