Friday, December 18, 2015 - 2:30pm
வவுனியா, குடாகச்சிகுடியில் புதையல் தோண்டுவதற்கு உதவியாக இருந்த முன்னாள் வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு (DIG) விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அதனைச் சூழுவுள்ள பிரதேசத்தைச் சேரந்த வர்த்தகர் சிலர், வவுனியா, குடாகச்சிகுடியில் புதையல் தோண்டியமைக்கு உதவியாக இருந்தமை மற்றும் அது தொடர்பான விசாரணையை முடக்கியமை தொடர்பில் சந்தேகத்தில் கைதான முன்னாள் வவுனியா DIG யூ.கே. திசாநாயக்க மற்றும் முன்னாள் வவுனியா பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜீவ பிரியதர்ஷன வீரசிங்க ஆகிய இருவரையும் எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று (18) இது குறித்த வழக்கு, வவுனியா பதில் நீதவான் என். அருணகிரிநாதன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் இவ்வனுமதியை பொலிஸாருக்கு வழங்கினார்.
இதற்கு முன்னர், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வர்த்தகர்கள், தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டப் பணம் செலுத்துமாறு தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Add new comment