Tuesday, December 8, 2015 - 12:45pm
அவன் காட் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவரான, ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பொலிஸ் இரகசிய பிரிவிற்கு இன்று (08) அழைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக ரணவக, அர்ஜுன ரணதுங்க ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை விசாரிக்கும் பொருட்டே அவர் இன்றைய தினம் அழைக்கப்பட்டுள்ளார்.
தற்போது, இரகசிய பொலிஸில் ஆஜரான அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment