சேயா வழக்கு மினுவாங்கொடையிலிருந்து நீர்கொழும்புக்கு

கொட்டதெனியாவ சிறுமி, சேயா செதெவ்மி கொலை தொடர்பிலான வழக்கை, தொடர்ந்தும் மினுவாங்கொடையில் நடாத்துவதில்லை என மினுவங்கொடை நீதவான் அறிவித்துள்ளார்.
 
குறித்த வழக்கு இன்று (07) மினுவாங்கொடை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான் ருவன் பதிரண இதனைத் தெரிவித்தார்.
 
குறித்த கொலை சம்பவம் தொடர்பில், நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்திலும், வழக்கு நடைபெற்று வருவதனாலேயே இம்முடிவை எடுத்துள்ளதாக நீதவான் தெரிவித்தார்.
 
அதன்படி சந்தேகநபரான சமன் ஜயலத்தை, நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
சேயாவை கொன்ற வழக்கில், சமன் ஜயலத்தின் மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...