Monday, November 30, 2015 - 10:15am
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 8 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று (30) ஆஜர் செய்யப்பட்டபோதே அவர்களை, எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
குறித்த மீனவர்கள் நேற்று (29) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
Add new comment