கொட்டாவ பொலிஸார் இருவர் இடைநிறுத்தம்

கொட்டாவ பொலிஸில், உப பொலிஸ் பரிசோதகர்களாக கடமையாற்றும் இருவர் வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது.
 
பொலிஸாருக்கு கிடைக்கும் முறைப்பாடுகளை தாமதமாக பதிவு செய்தல் மற்றும் போலியான பதிவுகளை மேற்கொள்தல் தொடர்பில் பொலிஸ் மாஅதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே அவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add new comment

Or log in with...