காலநிலை மாநாட்டிற்காக ஜனாதிபதி பிரான்ஸிற்கு

நாளை (30) பிரான்ஸில் இடம்பெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (29) பிரான்ஸ் விஜயம் செய்யவுள்ளார். 
 
ஐக்கிய நாடுகள் சபையினால் நடாத்தப்படும் இம்மாநாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பில் உலகின் பொது இணக்கப்பாடு, சட்டரீதியிலான கடப்பாடுகள் மற்றும் அதற்கான நடைமுறைகளை அறிமுகம் செய்தல் ஆகியன பற்றி கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
இம் மாநாட்டில் ஐ.நாவில் அங்கம் வகிக்கும் 80 நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன.

Add new comment

Or log in with...