2024 ஒலிம்பிக்கில் கிரிக கெட்டை சேர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சட்சன் சமீபத்தில் சர்வ தேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் வலியுறுத்தியதாக தெரிவித் துள்ளார்.
அப்போது ஒலிம்பிக் போட் டியில் 20 பேர் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.
இதுபற்றி ரிச்சட்சன் கூறும்போது,
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுவதற்காக சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு ஐ.ஓ.சி. தலைவரிடம் கேட்டுக் கொண்டேன்.
2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தேன். கிரிக்கெட் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அவ்வளவு எளிது அல்ல என தெரிவித்தார்.
Add new comment