Saturday, November 21, 2015 - 4:30pm
ஹட்டன் பகுதியில் கஞ்சாவுடன் 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிற்கு தொழில் நோக்கத்திற்காக செல்லவிருந்த நிலையில் இன்று (21) பிற்பகல் குறித்த சந்தேக நபர்களான 4 சிறுவர்களும் ஹட்டன் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேகநபர்கள் நால்வரையும் பரிசோதித்தபோது அவர்களிடம் கஞ்சா பக்கற்றுகள் நான்கு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்த அட்டன் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)
Add new comment