35 கோடி பெறுமதியான சிகரெட்டுகள் சுங்கத்தில்

சட்டவிரோதமான முறையில் டுபாயிலிருந்து கொண்டு வரப்பட்ட ரூபா. 35.5 கோடி பெறுமதியான சிகரெட்டுகளை கைப்பற்றியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட பொருட்களை கிராண்ட்பாஸிலுள்ள சுங்கத்திற்கு சொந்தமான இடத்தில் வைத்து இன்று (18) சோதனை செய்யும்போது, 1 கோடி 7 இலட்சத்து 70 ஆயிரம் சிகரெட்டுகளை இவ்வாறு கைப்பற்றியதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


Add new comment

Or log in with...