சேயா வழக்கு: ஜயலத்திற்கு விளக்கமறியல் நீடிப்பு

சிறுமி சேயா செதெவ்மி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சமன் ஜயலத்தை தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 
அதன்படி எதிர்வரும் டிசம்பர் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் இன்று (16) உத்தரவிட்டார்.
 
இவ்வழக்கு தொடர்பில், விளக்கமறித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேகநபர், கொழும்பு நீதிமன்ற வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய மனநல வைத்தியரிடம் காண்பிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பில் தங்களுக்கு உரிய அனுமதியை வழங்குமாறு கோரியிருந்தனர்.
 
மேலும், இன்றைய வழக்கின்போது, சிறுமி சேயாவின் பெற்றோர் சமூகமளித்திருந்தபோதிலும், அவர்களது சார்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் யாரும் சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...