விபத்தில் சகோதரர்கள் இருவர் பலி

ஹம்பாந்தோட்டை - மத்தளை விமான நிலைய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
 
குறித்த மாணவர்கள் இருவரும் சகோதரர்கள் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், டிப்பர் வாகனமொன்றில் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
 
குறித்த மாணவர்கள் இருவரும் ஹம்பாந்தோட்டை சுச்சி தேசிய பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்போர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add new comment

Or log in with...