சமன் ஜயலத்திற்கு விளக்கமறியல் நீடிப்பு

கொட்டதெனியாவ சிறுமி சேயா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சமன் ஜயலத்திற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த வழக்கு இன்றைய தினம் (02) மினுவங்கொடை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவங்கொடை பிரதான நீதவான் டீ.ஏ. ருவன்பதிரண உத்தரவிட்டார்.
 
அவரது DNA யும் சேயாவின் உடலிலிருந்து பெறப்பட்ட கொலையாளியின் DNA யும் பொருந்துகின்றது என, பொரளை ஜீன்டெக் நிறுவனத்தால் வழங்கப்பட்ட அறிக்கை, ஏற்கனவே நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
மேலும், சந்தேகநபர், நீதிமன்றில் வழங்கிய வாக்குமூலத்தின் பிரதியொன்றை, இரகசிய பொலிஸாருக்கு வழங்குமாறு, நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Add new comment

Or log in with...