நாடு திரும்பினார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (08) அதிகாலை நாடு திரும்பினார்.
 
ஜப்பானுக்கான தனது 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் உள்ளிட்ட குழுவினர் EK-349 எனும் விமானத்தில் இன்று (08) அதிகாலை 1.30 மணியளவில் இலங்கை வந்தடைந்தனர்.
 
குறிப்பிட்ட இந்த 5 நாள் விஜயத்தின்போது ஜப்பானிய பிரதமர், பேரரசர் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளைச் சந்தித்திருந்ததோடு, ஜப்பானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட சந்திப்பு ஒன்றிலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...