லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில், தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவுக்கு சொந்தமான ரூபா. 60 கோடி பணத்தில், மத ரீதியான 'சில்' துணிகளை பகிர்ந்தளித்தமை தொடர்பில் இருவரும் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த வழக்கு இன்று (07) எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், அவர்கள் தாக்கல் செய்த பிணை மனுவை விசாரித்த கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி அவர்களுக்கு பிணை மனுவை அங்கீகரிப்பதாக தெரிவித்தார்.
 
அதன் அடிப்படையில் தலா, ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் ரூபா 10 இலட்சம் பெறுமதியான சரீரப் பிணையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது.

Add new comment

Or log in with...