Tuesday, October 6, 2015 - 10:45am
கொட்டதெனியாவ சிறுமி சேயாவின் கொலையுடன் சம்பந்தமாக கைதுசெய்யப்பட்ட கொண்டயாவின் சகோதரன் சமன் ஜயலத், இன்று (06) பொரளையில் உள்ள ஜீன்டெக் ஆய்வுகூடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இவர் குறித்த கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான கொண்டையா என அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்தவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சமன் ஜயலத் நேற்றையதினம் தானே குற்றத்தை செய்ததாக வாக்குமூலம் அளித்திருந்ததாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து சந்தேகநபரை DNA (மரபணு) சோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Add new comment