பிரகீத் வழக்கு: சந்தேகநபர்கள் கிரித்தலைக்கு

பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இதுவரை இது தொடர்பில் 11 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
 
பிரகீத்தை தடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் கிரித்தலை இராணுவ முகாமிற்கு குறித்த சந்தேகநபர்களை கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அரச தரப்பு தலைமை வழக்கறிஞரிடமிருந்து கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
 
இதனை அடுத்து எதிர்வரும் ஒக்டோபர் 03 தொடக்கம் 13 வரையான காலப்பகுதியில் இந்த சந்தேகநபர்களை அங்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Add new comment

Or log in with...