அவன் கார்ட்: தடையின்றி விசாரிக்க பணிப்பு

அவன்காட் விசாரணை உள்ளிட்ட அனைத்து விசாரணைகள் தொடர்பிலும் உரிய வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
 
இன்று (23) ஊடக அமைச்சில் நடைபெற்ற அமைச்சரவை தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
அனைத்து விசாரணைகள் குறித்தும் இறுக்கமான கொள்கைகளை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

Add new comment

Or log in with...