Wednesday, September 23, 2015 - 10:15am
பதிப்பு 02
துப்பாக்கிச்சூட்டை நடாத்தியவர், நீதிமன்ற மதில் மீது ஏறி தப்பிச் சென்றுள்ளதோடு, அவரது கையில் பென்டேஜ் ஒன்றினால் சுற்றிக் கட்டப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பட்டவெல சமயன் என்பவருக்கும் மற்றுமொரு குழுவுக்கும் இடையில் வெகு நாட்களாக பகைமை நிலை காணப்பட்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸார், அக்குழுவுக்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் எனத் தெரிவித்தனர்.
இது குறித்து விசாணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பதிப்பு 01
கடுவெலை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (23) காலை துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகளை ஏற்றிச் செல்லும் பொலிஸ் வாகனம், நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்த வேளையில், பட்டவெல சமயன் என்பவரை நோக்கியே இத்துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த குறித்த நபரை அதே வாகனத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Add new comment