ரஜினியின் கபாலி படப்பிடிப்பு துவங்கியது

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது.  ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க ஒப்புக் கொண்ட படம் 'கபாலி'. ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். 
 
சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை தாணு தயாரிக்க இருக்கிறார்.  இப்படத்தின் போஸ்டர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அப்போஸ்டர்களில் உள்ள ரஜினியின் தோற்றம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
 
 மலேசியாவில் தொடங்கப்படவிருந்த 'கபாலி' படப்பிடிப்பு, நேற்று முதல் சென்னையில் துவங்கியிருக்கிறது.
 
காலை 9 மணியளவில் சென்னையில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் ரஜினி, கலையரசன் உள்ளிட்ட சிலர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் படமாக்க படக்குழுட் திட்டமிட்டு இருக்கிறது.
 
முதல் காட்சியாக ரஜினி கோட் அணிந்து நடந்து வருவது போன்ற காட்சியைப் படமாக்கினார்கள். ரஷ்யன் கல்சர் சென்ரலில் படக்குழுவினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. படத்தின் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் எதுவும் வெளியாகி விடக்கூடாது என படப்பிடிப்பு அரங்கினும் செல்போனுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.  மயிலாப்பூரில் வாழும் கபாலீஸ்வரன் என்ற வயதான தாதா பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி.
 
அந்த ஏரியாவில் உள்ள சின்ன தாதாக்களை எல்லாம் அழித்து பெரிய தாதாவாக ஆகியிருக்கிறார் ரஜினி. அப்போது தனது நண்பர்களின் மகன்களை மலேசியாவுக்கு வேலைக்கு என்று அழைத்து சென்று ஏமாற்றியது ரஜினிக்கு தெரிய வருகிறது.
 
அவர்களை எதிர்த்து போராடி எப்படி வெற்றியடைகிறார் ரஜினி என்பது தான் 'கபாலி' கதைக்களம்.  
 

There is 1 Comment

Add new comment

Or log in with...