Saturday, September 19, 2015 - 11:15am
நேற்று முன்திம் (17) இரவு கொஸ்கொடை, மஹபெலெஸ்ஸ பகுதியில் கணவனால் மனைவி மற்றும் குழந்தை கடலில் தள்ளப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட குழந்தையின் சடலம் இன்று (19) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் கொஸ்கொடை கடலின் கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், கையாவல - அங்குணகொல பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
Add new comment