Friday, September 18, 2015 - 11:15am
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் (TRC) முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றத்தால் இன்று (18) இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான ரூபா 600 மில்லியன் செலவில் பெளத்த மதம் சார்பான வெண்ணிற ஆடை (சில்) வழங்கியமை தொடர்பிலேயே குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறு குறித்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment