Monday, September 7, 2015 - 11:15am
அவன்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான காலி துறைமுகத்திலுள்ள மிதக்கும் ஆயுத கப்பல் களஞ்சியம் தொடர்பான வழக்கு இன்று (07) முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பாக அதன் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் நிஸாந்த பீரிஸினால் குறித்த வழக்கிலிருந்து அவன் கார்ட் நிறுவனத்தை விடுதலை செய்வதாக அறிவித்ததோடு, வழக்கையும் முடிவுக்கு கொண்டு வருதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் நிஸ்ஸங்க சேனாதிபதி வெளிநாடு செல்வதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையும் இதன் மூலம் அகற்றப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Add new comment