எரிபொருள் விலைக் குறைப்புக்கு புதிய சூத்திரம்

எரிபொருள் விலைக் குறைப்பு தொடர்பில் புதிய சூத்திரமொன்று தயார் செய்யப்பட்டுள்ளதாக மின்வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
 
அமைச்சரவை பதவியேற்பின் பின்னர், புதிய எரிபொருள் விலைச் சூத்திரம் அமுலுக்கு வரும் என, மின்வலு சக்தி அமைச்சின் செயலாளர் ஆர்.எம். படகொட தெரிவித்துள்ளார்.
 
உலக சந்தையில் எரிபொருளின் விலைகளில் ஏற்பட்டுள்ள சரிவை அடுத்தே இச்சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
 

Add new comment

Or log in with...