Wednesday, August 26, 2015 - 12:00pm
மாத்தளை வில்கமுவ நெல்கொள்வனவு செய்யும் நிலையத்தில் நீண்ட வரிசையில் நிற்கும் விவசாயிகளிடமிருந்து இன்றே நெல் கொள்வனவு செய்யவும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பிட்ட பிரதேசத்தில் நீண்டு செல்லும் நிரையை முடிவுக்கு கொண்டு வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாத்தளை அரச அதிபருக்கு இன்று (26) உத்தரவிட்டுள்ளார். உரிய அதிகாரிகளை அப்பிரதேசத்திற்கு அனுப்பி மிக விரைவாக அந்நடவடிக்கையை எடுக்குமாறும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதற்கு அவசியமான நிதியை அரச அதிபருக்கு அனுப்பி சேமிப்பிலுள்ள நெல்லை ஆலைக்கு அனுப்பி அரிசாக மாற்றுவதற்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் நெல்லை உரிய சேமிப்பகத்தில் சேமிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறே இவ்வுத்தரவை வழங்கியுள்ளார்.
மேலும் பொலன்னறுவையில் நெல்கொள்வனவில் குறைபாடுகள் காணப்படுமாயின் அதற்கான உரிய தீர்வை உடனடியாக எடுக்குமாறு பொலன்னறுவை அரச அதிபருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
Add new comment