ஊடகவியலாளர் க. கிஷாந்தனின் தாயார் காலமானார்

ஊடகவியலாளர் க. கிஷாந்தனின் தாயார் காலமானார்-GK Krishanthan's Mother Passed Away

 

ஹட்டன் - பத்தனை கிரேக்லி தோட்டத்தினை வசிப்பிடமாக கொண்ட எமது தினகரன் பத்திரிகையின் ஹட்டன் சுழற்சி நிருபரான க. கிஷாந்தனின் அன்புத் தாயார் சுப்ரமணியம் சாந்தினி இன்று (04) அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

இவர், ஹட்டன் - பத்தனை கிரேக்லி தோட்டத்தின் முன்னாள் தொழிற்சாலை உதவி உத்தியோகத்தரான, சண்முகம் கணேசனின் அன்பு மனைவியாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை நாளை மறுதினம் (06) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு பத்தனை கிரேக்லி தோட்ட இல்லத்தில் இடம்பெற்று, தகன கிரியைகள் கொட்டகலை கொமர்ஷல் தகனசாலையில் இடம்பெறவுள்ளது.

 


Add new comment

Or log in with...