Monday, August 27, 2018 - 10:06am
கோத்தாபய உள்ளிட்ட 07 பேருக்கு, விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.
டீ.ஏ. ராஜபக்ஷ அரும்காட்சியக நிர்மாணத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடி தொடர்பில் குறித்த 07 பேருக்கும் எதிர்வரும் செப். 10 ஆம் திகதி, விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக, சட்ட மா அதிபரினால், கடந்த வெள்ளிக்கிழமை (24) விசேட மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Add new comment