Sunday, August 16, 2015 - 3:15pm
54 பேருடன் சென்ற இந்துனேஷியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று பபுவா பகுதியில் காணமல் போயுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜகார்த்தாவை மையமாகக் கொண்டு இயங்கும் ரிகனா உள்ளூர் விமான சேவைக்குச் சொந்தமான ஏயார் ஏரிஆர் 42 என்ற விமானம் ஒன்றே இவ்வாறு காணமல் போயுள்ளது.
குறித்த விமானம் காணாமல் போகும் சந்தர்ப்பத்தில் அதில் 54 பேர் பயணித்துள்ளனர். இதன்போது 44 பெரியவர்கள், 5 சிறுவர்கள் மற்றும் 5 விமான அதிகாரிகள் ஆகியோர் இதில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டு போக்குவரத்து அமைச்சின் பேச்சாளரான ஜே. ஏ. பராடா இதனை உறுதி செய்துள்ளதோடு, “இது வரை விமானத்திற்கு என்ன நடந்தது என்பது பற்றி சரியாகத் தெரியவில்லை. ஆயினும் அதிகாரிகளுடன் இது பற்றி ஆராய்ந்து வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் குறித்த பகுதியில் காலநிலை சீரற்றதாகக் காணப்படுவதாலும், இருள் மற்றும் கருமுகில் சூழ்ந்த வானிலை காரணமாக மலைப்பாங்கான குறித்த பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவது கடினமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
Add new comment