சனத் ஜயசூரிய சாகலவுக்கு ஆதரவு செய்தி 07ம் பக்கம்

 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சரும் இலங்கை கிரிக்கெட் அணியின் கீர்த்திமிகு தலைவருமான சனத் ஜயசூரிய எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் சாகல ரத்நாயக்கவுக்கு ஆதரவு வழங்குவதாக நேற்று பிரமாணம் செய்தார்.

சனத் ஜயசூரிய கடந்த பொதுத் தேர்தலில் தாம் பிறந்த ஊரான மாத்தறையில் போட்டியிட்டு 74,000 க்கும் அதிகமான விருப்பு வாக்குகளை பெற்று மாத்தறை மாவட்டத்திலேயே முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். கடந்த ஜுலை மாதம் அவர் செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிட முடிவு செய்து மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைத்துவ த்திலிருந்து விலகிக்கொண்டார்.

சாகல ரத்நாயக்கவுக்கு தமது ஆதரவை வழங்க முன்வந்தது குறித்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எல்லையற்ற ஆற்றல்களைக் கொண்ட வேட்பாளரான சாகல ரத்நாயக்கவுக்கு எனது ஆதரவை வழங்கக் கிடைத்ததையிட்டு பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். இம்மாவட்டம் தொடர்பில் அவரது தொலைநோக்கு ஊடான அவரது ஆழமான தொடர்பு, மாத்தறை தென் பகுதி மக்கள் தொடர்பில் அவரிடம் காணப்படும் புரிந்துணர்வு மூலம் புலப்படுகிறது. அவர் மக்களின் நன்மதிப்பை பெற்ற மிகவும் பெறுமதி வாய்ந்தவராவார் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

சாகல ரத்னாநயக்கவுக்கு ஆதரவு வழங்க என்னுடன் இணைந்து எதிர்வரும் தேர்தலில் அவரது வெற்றியை உறுதிப்படுத்த முன்வருமாறு நான் இந்த மாவட்ட மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார். 


Add new comment

Or log in with...