எமில் ரஞ்சன், நியோமால் ரங்கஜீவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

எமில் ரஞ்சன் நியோமால் ரங்கஜீவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு-Welikada Incident-Emil Ranjan-Niyomal Rangajeewa Further Remanded

 

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசாரணைப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோருக்கு எதிர்வரும் ஜூன் 05 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ, முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோர் முறையே மார்ச் 28 மற்றும் மார்ச் 29 ஆம் திகதிகளில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்தோடு 40 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...