புகையிரத நிலையத்தில் வெடிப்பு சம்பவம்

சிலாபம் புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத பெட்டி ஒன்றினுள் இருந்த உரிமையாளர் எவருமற்ற பொதி ஒன்றை பரீட்சித்த வேளையில் அது வெடித்துள்ளது.
 
இதன்போது அதனை பரீட்சித்த குறித்த ஊழியர் காயமடைந்துள்ளதோடு அவர் தற்போது சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சஞ்சீவ ரணசிங்க எனும் 23 வயது நபரே இவ்வாறு காயமடைந்தவராவார்.
 
கொழும்பிலிருந்து வந்த 422 இலக்க குறித்த புகையிரதம் சிலாபம் இரயில் நிலையத்தில் தரித்து நின்றுள்ளது. இதனை சுத்தம் செய்வதற்காக சென்ற குறித்த ஊழியர் இரயிலின் பெட்டி ஒன்றின் ஆசனத்தில் சிறிய பொதியொன்றை கண்டுள்ளார். அதில் என்ன உள்ளது என பிரிக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த பொதியிலிருந்து வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இது குறித்த மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Add new comment

Or log in with...