வத்தளையில் அடையாளம் தெரியாதோரால் ஒருவர் கொலை

(UPDATED)
நான்கு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு வத்தளை பகுதியில் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இன்று (05) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 46 வயதான குறிப்பிட்ட நபர் மற்றும் ஒருவருடன் முச்சக்கர வண்டி ஒன்றில் பிரயாணம் செய்துள்ளார். இதன்போது மற்றொரு முச்சக்கர வண்டியில் வந்த நான்கு அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை வழி மறித்து அந்நபரை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
குறிப்பிட்ட நபர் வெலிசறை பொருளாதார மத்திய நிலையத்தைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 
குறிப்பிட்ட நால்வரையும் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதோடு இது குறித்த விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்

Add new comment

Or log in with...