பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ ஆதாரத்தை எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று (21) உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோதே நீதவான் இதனை அறிவித்தார்.
கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், இந்நாட்டிலுள்ள நீதவான்கள் மற்றும் வழக்கறிஞர்களில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகள் என, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் இரண்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பேசிய முழு உரையும் அடங்கிய வீடியோ காட்சியை ஊடகங்களிடமிருந்து பெற்று, எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Add new comment