அகதிகளாக இருந்த இலங்கையர் இந்தியாவிலிருந்து திரும்பினர்

இந்தியாவின் தமிழ்நாட்டில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 45 பேர் மீண்டும் இலங்கைக்கு திரும்பியள்ளனர்.

நேற்று (28) இரவு விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பிட்ட இலங்கையர்கள், இலங்கையில் யுத்தம் நடந்த காலப்பகுதியில் இந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களாவர்.

மேலும் 68 ஆயிரம் பேர் இன்னும் தமிழ்நாட்டின் முகாம்களில் வசித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


Add new comment

Or log in with...