கொழும்பின் பல இடங்களில் நீர் வெட்டு

கொழும்பின் கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (29) காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையான 10 மணி நேர நீர்வெட்டு அமுலிலிருக்கும் என இலங்கை நீர் வழங்கல் அதிகார சபை அறிவித்துள்ளது.

குறிப்பாக கோட்டை, எதுள் கோட்டை, உடஹமுல்லை, பத்தேகம, மீரிஹானை, நுகேகொடை, பாகொடை போன்ற பகுதிகளில் இந்நீர் வெட்டு அமுலிலிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டை பகுதியிலுள்ள நீர்ப் பம்பி ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளாறை சீர்திருத்துவதற்காக இந்நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
 


Add new comment

Or log in with...