தேசிய பிரச்சினைக்கு 13க்குள்; அரசியல் தீர்வு

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்லாத அரசியல் தீர்வொன்றை ஆட்சியமைத்து 6 மாத காலத்தினுள் முன்வைப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகல மக்களினதும் நியாயத்தையும் சமத்துவத்தையும் உறுதி செய்வதற்காக பரந்த அதிகாரங்கள் மற்றும் மாவட்ட ரீதியிலான பொறிமுறை ஒன்றுடன் கூடிய தேசிய நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிப்பதாகவும் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாகவும் அதில் குறிப்பிடப்பட் டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கொழும்பு ஹென்றி பேதிரிஸ் விளையாட்டரங்கில் வைத்து வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு முன்னதாக ஐ.ம.சு.மு. தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. ஐ.ம.சு.மு. சு.க. தலைவர்கள், ஐ.ம.சு.மு. கூட்டுக் கட்சித் தலைவர்கள் அடங்கலான குழுவினர் இதனை அவரிடம் கையளித்திருந்தனர்.

“எதிர் காலத்திற்கான உத்தரவாதம்” என்ற தொனிப்பொருளில் வெளியிடப்பட்ட ஐ.ம.சு.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய இணக்கப்பாடு மற்றும் நிரந்தர நல்லிணக்கம் மோசடியை ஒழித்து நீதிமன்ற சுதந்திரத்தை பாதுகத்தல், பொருளாதார முகாமைத்துவம், வெளிந ¡ட்டுக்கொள்கை, வீட்டுக்கொள்கை, கல்விக்கொள்கை, சுகாதாரக் கொள்கை, சுற்றாடல் மற்றும் வனவளம், கலாசரம் கலை, தொடர்பாடல் கொள்கை விளை யாட்டு, இளைஞர் விவகாரம், பெண்கள் மற்றும் மகளிர் விவகாரம் முதலீடு உட்கட்டமைப்பு என 12 அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதற் பிரதியை ஐ.ம.சு.மு. செயலாளர் சுசில் பிரேம் ஜெயந்த், முன்னாள் ஜனாதிபதியும் ஐ.ம.சு.மு. பிரசார குழு தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார். அதன் பின்னர் மத குருமார்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் விஞ்ஞாபன பிரதிகள் கையளிக்கப்பட்டன.

ஐ.ம.சு.மு.வின் 12 அம்ச தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள அம்சங்கள் புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு மாத காலத்தினுள் செயற்படுத்த ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள் ளதாவது,

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லி ணக்கம்

சகலரும் சுதந்திரமாக வாழும் பாதுகாப் பான சூழலை உருவாக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். சகல இனத்தவர்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் அரச கட்டமைப்பு உருவாக்கி ஆள்புல ஒருமைப்பாடு இறைமை என்பனவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்.

தேசத்தில் பிரிவினைவாதம், சர்வதேச தலையீடு என்பன தலைதுக்க இடமளி யோம்.

பெரும்பான்மை சிங்கள மக்கள் வாழும் இன, மத பல்லினத்தன்மையுடன் கூடிய நாடாக அன்றும் ஏற்றோம் நாளையும் ஏற்போம்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை மேலும் பலப்படுத்தும் அரசியல் தீர்வு குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பி னர்கள், அரசியல் கட்சிகள் அடங்களான சகல தரப்பினருடனும் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டு ஒரு மாத காலத்தினுள் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்து ரைகள் ஒரு மாத காலத்தினுள் செயற் படுத்தப்படும்.

இருளில் இருந்து வெளிச்சத்திற்கு

தற்போதைய அரசால் நிறுத்தப்பட்ட தேசிய மாவட்ட மற்றும் கிராமிய அனைத்து பாரிய, சிறிய அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் விரைவாக ஆரம்பிப்போம்.

சிறிய, நடுத்தர அளவிலான மற்றும் பாரியளவிலான ஒப்பந்தக்காரர்களுக்கு அரசால் கொடுப்பனவு செய்யப்பட வேண்டிய அனைத்து நிலுவை கொடுப்பன வுகளையும் 2015 டிசம்பர் 31இற்கு முன்பதாக செலுத்துவோம் என உறுதியளிக்கின்றோம்.

அநியாயமான முறையில் சேவையில் இருந்து விலக்கப்பட்ட அனைத்து அரச சேவையாளர்களையும் நிலுவைச் சம்பளத் துடன் மீண்டும் சேவையில் அமர்த்துவோம். அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அனைத்து சேவையாளர்களுக்கும் உரிய இடத்தை மீண்டும் வழங்குவோம்.

கொள்கை அடிப்படையில் அநியாயத் திற்கும் அநீதிக்கும் எதிராக சேவையில் இருந்து விலகிய நேர்மையான அரச சேவையாளர்களை மீண்டும் சேவையில் அமர்த்துவோம்.

வாழ்க்கை சுமைக்கோர் நிம்மதி

அரிசி, பருப்பு, கோழியிறைச்சி, மீன், கருவாடு, தேங்காய், செத்தல் மிளகாய், சீனி, குழந்தை பல்மா உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை சாதாரண நிலைக்கு குறைப்பதுடன், அவ்வத்தியா வசிய பொருட்களின் விலையை ஸ்திரமாக பேணுவதற்கு அவசியமான வகையில் லக் சதொச மற்றும் கூட்டுறவு கோப் சிட்டி நிறுவனங்களை விரிவாக் குவோம்.

பிரதேச சபை ஆட்சிக்குட்பட்ட பிர தேசங்களின் நீர்க்கட்டணத்தை 50%தினாலும், நகர சபை ஆட்சிக்குட்பட்ட நீர்க்கட்ட ணத்தை 25% தினாலும் உடனடியாகக் குறைப்போம்.

அனைத்து சமுர்த்தி பயனாளி குடும்ப த்திற்கும் அரசின் ஊடாக காஸ் அடுப்பி னையும் காஸ் சிலிண்டர் ஒன்றையும் மற்றும் காஸ் பாவனைக்காக மாதாந்தம் 350 ரூபாவை வழங்கும் திட்டத்தை ஆரம்பிப்போம்.

பிரிவினைவாத பயங்கரவாதம் மற்றும் 88,89 வன்செயல் காலப்பகுதியில் தாய், தந்தையை அல்லது இருவரையும் இழந்த பிள்ளைகளின் பாதுகாப்பிற்காகவும் இறப்பு மற்றும் நிரந்தர விசேட தேவை காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்காகவும் மாதாந்தம் 5000 கொடுப்பனவொன்று வழங்கப்படும்.

தீவிர சிறுநீரக நோயாளர்கள் உள்ள குடும்பங்களுக்கு 7,500 ரூபா மாதாந்த வைத்திய கொடுப்பனவுகளை பெற்றுக்¦ காடுப்பதற்கும் சிறுநீரக நோய் அதிகரித் துள்ள பிரதேச மக்களுக்கு தூய குடிநீரை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்போம்.

தாய், தந்தை அல்லது இருவரும் நோயுற்று அல்லது இழக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் விசேட தேவை யுடைய பிள்ளைகள் உள்ள குடும்பங்களின் கல்வி மற்றும் நலன்புரி தேவைகளுக்காக உயர்ந்தபட்சமாக 5000 விசேட நிதி உதவியினை மாதாந்தம் வழங்குவோம்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஓர் உறைவிடம்

தற்போது அரசாங்கத்திங்கு சொந்தமான வீடுகளில் பத்து வருடங்களுக்கு மேல் வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் வசிக்கும் குறைந்த வருமானமுடையவர் களின் குடும்பங்களுக்கு அவ்வீடுகளை உரித்துடையதாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

இலங்கையின் வாடகைக் குடியிருப்பா ளர்கள் மற்றும் புதிதாக திருமணமான குடும்பங்கள் உள்ளிட்ட அனைத்து வீட்டு உரிமையற்றவர்களுக்கும் தமது முதல் வீட்டை அமைக்க அல்லது கொள்வனவு செய்ய இலகு கடன் அடிப்படையில் ரூபா 4 மில்லியன் வரை வீடமைப்புக் கடன் பெற்றுக்கொடுப் போம்.

வெளிநாட்டில் தொழில் புரிவோருக்காக நான்கு மில்லியன் ரூபா வரையிலான விசேட சலுகை வட்டி வீட்டுக்கடன் திட்டம் ஒன்றை அரச வங்கிகளின் ஊடாக அறிமுகப்படுத்துவோம்.

மகளிருக்கு

ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்து வப்படுத்தி சுயதொழில் ஆரம்பிப்பதற்கு முயற்சிக்கின்ற பெண்களுக்கு வியாபார அறிவு, பயிற்சி மற்றும் 50,000 ரூபா வரை வட்டியற்ற, மற்றும் 50,000 ரூபா முதல் 200,000 வரை சலுகை வட்டிக்கு கடன் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.

குறைந்த வருமானமுடைய கர்ப்பிணிப் பெண்களுக்கு 1500 ரூபா மாதாந்த கொடுப்பனவு ஒன்றையும் வழங்குவோம்.

தாய் மற்றும் சேய் சுகாதார நலன் சேவைகளை மென்மேலும் மேம்படுத்து வதற்காக குடும்ப சுகாதார தாதியர் 25000 பேரை இணைத்துக் கொள்வோம்.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் சேவையில் உள்ளகளின் மூன்றாவது பிள்ளைக்கு வழங்கப்படுகின்ற ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு இரண்டு இலட்சமாக உயர்த்தப்படும்.

தாய், தந்தை அல்லது இருவரும் நோயு ற்று அல்லது இழக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் விசேட தேவையுடைய பிள்ளைகள் உள்ள குடும்பங்களின் கல்வி மற்றும் நலன்புரி தேவைகளுக்காக 5,000 ரூபா விசேட நிதி உதவி வழங்கப்படும்.

க.பொ.த. (உயர்தரப் பரீட்சைக்கு) தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கணனி ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு வட்டியற்ற சலுகைக் கடன் தொகை வழங்கப்படும்.

அனைத்து ஆரம்ப பாடசாலைகளுக்கும் 50,000 ரூபா வட்டியற்ற கடன்தொகையை வழங்குவோம். ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்கு 5000 ரூபா மாதாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்குவோம்.

இளைஞர்களுகாக

18 - 25 வயது வரையான இலங்கையின் அனைத்து இளைஞர், யுவதிக்கும் 50,000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்கு வோம்.

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்காக 10,000 ரூபா மாணவர் நிதியுதவித் தொகையை பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற உடனேயே வழங்குவோம்.

மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவை 6,000 ரூபா வரை அதிகரிப்போம்.

அரச, தனியார், மற்றும் சுய கைத்தொழில் பிரிவுகளை ஒன்றிணைத்து 15 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவோம். புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு 6 மாதத்திற்குள் அரச துறையில் 60,000 வேலை வாய்ப்புக்களை இளைஞர்களுக்காக வழங்குவோம்.

குறைந்த வருமானமுள்ள குடும்பங்களில் புதிதாக திருமணம் செய்யும் இளைஞர், யுவதிகளுக்கு 200,000 ரூபா வட்டியற்ற திருமணப் பரிசு கடன் திட்டமொன்றை உடனடியாக அமுலாக்குவோம்.

சிரேஷ்ட பிரஜைகளுக்கு

2015 ஆம் ஆண்டில் எம்மால் புதிதாக உருவாக்கப்படுகின்ற உயர் அடிப்படை சம்பளத்தினை கொண்டு மற்றும் அனைத்து ஓய்வூதிய சிக்கல்களை நிவர்த்தி செய்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரஜைகளை சிறப்பான ஓய்வூதிய தரத்தில் பேணுவோம்.

சிரேஷ்ட பிரஜைகளின் 25 இலட்சம் ரூபாய் வரையிலான நிரந்தர சேமிப்பிற்கு 15% வட்டி வழங்கப்படும்.

அரச சேவையாளர்களுக்கு

முன்னைய அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு வழங்கிய அனைத்து சம்பள அதிகரிப்புக்களையும், அடிப்படைச் சம்பளத்தோடு இணைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

அரச சேவையாளர்களின் கொடுப்பன வுகளை அடிப்படைச் சம்பளத்துடன் இணைத்து ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தினை 25,000 ரூபா வரை உயர்த்துவோம்.

தனியார் துறையினருக்கு

தனியார் துறையின் ஊழியர்களின் குறைந்த பட்ச அடிப்படைச் சம்பளத்தை ரூபா 3,000 த்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் அச்சம்பள அதிகரிப்பினால் தனியார் தொழில் கொள்வோர் சங்கடத்திற்கு உள்ளாக்கப்பட் டால் அதனை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான அரச வரிச் சலுகைகள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவோம்.

அரச சேவையில் பணிபுரியாத வைத்தியர்கள், பொறியியலாளர்கள், நில அளவையாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காய்வு அறிவியல் துறையினர் போன்ற தொழில் துறையாளர்களுக்கு சூழலுக்கு சாதகமான மோட்டார் வண்டியொன்றை கொள்வனவு செய்வதற்கு தீர்வை வரிச்சலுகையுடன் கூடிய வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

நெல் மற்றும் மரக்கறி வியாபாரிகள்

அரிசி கிலோ ஒன்றுக்கு 50 ரூபா நியாய விலை செலுத்துவோம்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் “உரமானியம்” தொடர்ந்து முன் கொண்டு செல்லப்படும்.

தேயிலை கிலோ ஒன்றுக்கு 90 ரூபாய் நியாய விலை வழங்குவோம்.

இறப்பருக்கு 300 ரூபா நியாய விலை வழங்குவோம்.

ஒரு லீற்றர் பாலுக்கு 70 ரூபாய் நியாய விலை வழங்குவோம்.

கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர் களுக்கு

கலைஞர்களுக்காக நாம் நடைமுறைப்ப டுத்திய சமகால அரசினால் நிறுத்தப்பட்ட வட்டியற்ற வாகனக் கடனை 15 இலட்ச ரூபா வரை அதிகரித்து தீர்வை வரிச்சலு கையின் கீழ் மீண்டும் செயற்படுத்துவோம்.

கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர் களுக்காக அரச அனுசரணையுடன் கூடிய ஓய்வூதியத் திட்டமொன்றை மற்றும் மருத்துவ காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுப்போம்.

ஊடகவியலாளர்கள் முகம்கொடுக்கின்ற தொழிற்துறை சிக்கல்களை நிவர்த்திக்க தலையீடு செய்வதுடன் அவர்களுக்கு அவசியமான உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்க வட்டியற்ற கடன்களை அரச வங்கிகள் ஊடாக வழங்குவோம்.

மீனவர்களுக்கு

வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கை கடற் பரப்பினுள் சட்ட விரோதமாக இடம்பெறுகின்ற மீன்பிடி யினால் இலங்கை மீனவர்களுக்கு விரைவாக இழக்கப்பட்டு வரும் உரிமை களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்.

வெளிநாட்டு பணியாளர்களுக்கு

தென்கொரியா, ஜப்பான், இத்தாலி மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் புதிய தொழில் ஒப்பந்தங் களை ஏற்படுத்தி அதி உயர் சம்பளத்துடன் கூடிய 50,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.

சிறியளவிலான வியாபாரிகளுக்கு

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுயதொழில் ஆரம்பிப்பதற்கு முயற்சி செய்கின்ற இளைஞர், யுவதிகள் 50,000 பேருக்கு வர்த்தக அறிவு பயிற்சி மற்றும் தொழிற் பயிற்சி, 50,000 ரூபா வரையிலான வட்டியற்ற மற்றும் 50,000 ரூபா முதல் 200,000 வரையிலான சலுகை வட்டியுடனான கடனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.

போக்குவரத்து சேவையில் தொழில் புரிவோருக்கு

போக்குவரத்து சேவையினை வழங்கும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளின் அவசர பணத்தேவையினை பூர்த்தி செய்வதற்கு ரூபா 1 இலட்சம் விசேட குறைந்த வட்டியுடனான கடனட்டைகளை அரச அனுசரணையுடன் பெற்றுக்கொடுப் போம். முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் வாடகை மோட்டர் வாகன சேவைக்கு தன் வியாபாரத்தை அபிவிருத்திச் செய்யும் சந்தர்ப்பத்தில் கொள்வனவு செய்யப்படும் முதல் மோட்டார் வாகனத்திற்கு வரிச்சலுகை வழங்க நடவடிக்கை எடுப்போம்.

தோட்ட மக்களுக்கு

தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட் கூலி ரூபா 1000 வரை அதிகரிக்கப்படு வதற்கும், அக்கொடுப்பனவிற்கு அரச அனுசரணை தேவைப்படின் அதற்கான நிதி உதவிகளை பெற்றுக்கொடுத்து மேற்குறிப்பிட்ட சம்பள அதிகரிப்பை துரிதமாக செயற்படுத்துவோம்.

தோட்ட லயன் அறைகளில் வாழும் குடும்பங்களை அவர்களுக்கே உரித்தான வீட்டில் வசிப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை வழங் கவும் எமது அரசாங்கத்தால் ஆரம்பிக்கப் பட்ட வேலைத்திட்டத்தை முன்னெ டுத்துச் சென்று துரிதமி¡க நிறைவு செய்வோம். 


Add new comment

Or log in with...