பஸ் விபத்துக்குள்ளாகி 16 மாணவர்கள் காயம்

பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் ஒன்று ஜீப் வண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, டொரிங்டன் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பம்பவத்தில் 16 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதிச் சமிக்ஞை விளக்கை மீறிச் சென்ற குறித்த பஸ் வண்டி ஜீப்புடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்களில் 12 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...