Friday, July 24, 2015 - 4:30pm
நாளை (25) காலை 8.00 மணி முதல் நாளை மறுதினம் (26) காலை 5.00 மணி வரையான 21 மணித்தியாலங்களுக்கு குறிப்பிட்ட சில பகுதிகளில் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் அதிகார சபை அறிவித்துள்ளது.
களட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளவுள்ள அவசர திருத்தப் பணி காரணமாக, ஹங்வெல்லை, பாதுக்கை, ஹோமாகம, கொட்டாவை, பன்னிபிட்டிய ஆகிய இடங்களுக்கு குறிப்பிட்ட நீர் வெட்டு அமுலில் இருக்கும்.
இதன் காரணமாக கொழும்பு 08, 09, 10 மற்றும் மஹரகம பகுதிக்கு குறைந்த அழுத்தத்திலான நீர் வழங்கல் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment