ஜே. வி. பி. தலைவர் யாழ். விஜயம்

 விலை போகாத பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதுடன், நிலையான அரசாங்கத்தினை அமைப்பதற்கு இந்த தேர்தலில் மக்களின் பங்களிப்பு மிக அவசியமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மனசாட்சியின் நடவடிக்கை என்ற தொனிப் பொருளில் வேலைத் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். வடகிழக்கு தெற்கு என்று நாட்டினை பிரிக்காது. பொதுவாக நாட்டு மக்களுக்கான வேலைத் திட்டமாக முன்னெடுத்து வருகின்றோம்.

அதன் வழிமுறைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வதென தேர்தல் விஞ் ஞாபனத்தில் முன்வைத்துள்ளோம். நாட் டில் மொழி ரீதியான பாகுபட்டினை நீக்குவதற்காகவும், மொழி ரீதியாக சமத்துவத்தினை ஏற்படுத்துவதற்கும் ஒன்றிணைந்துள்ளோம்.

மமஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகை என்பது, இலங்கையில் வாழும் மக்களின் நன்மை கருதி அல்ல. இந்த நாட்டில் தனது குடும்பம் தனது தனது குடும்பத்தினைச் சூழ்ந்துள்ள கும்பலின் இருப்புக்காகவே, வருகை தந்துள்ளார்.

தேசிய அரசாங்கம் உருவாகுவதற்கு எந்தவித சாத்தியப்பாடுகளும் இல்லை என நினைக்கின்றோம். இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ கூடுதலாக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப் பினர்களை விலை க்கு வாங்கிக் கொண்டு ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இருக் கின்றது.

மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையினை பெற்று ஆட்சி அமைக்குமாயின், ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பி னர்களைப் பெற்றுக் கொண்டு, ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

இந்த இரண்டு கட்சிகளின் போக்குகள் இவ்வாறாக அமைந்திருக்கின்றன. இத னால் தான் மக்களிடம் விலை போகாத பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கு மாறு கோரிக்கை விடுகின்றோம் என தெரிவித்தார்.


Add new comment

Or log in with...