பாராளுமன்றில் சமர்ப்பிக்கும் முன் கோப் அறிக்கை வெளியிட தடை

மத்திய வங்கியின் திறைசேரி முறி தொடர்பான பாராளுமன்ற கணக்காய்வு அறிக்கையான கோப் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன்னர் வெளியிடுவதற்கோ அல்லது பகிரங்கப்படுத்துவதற்கோ கூடாது என கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (16) பிறப்பிக்கப்பட்டுள்ள இத்தடையுத்தரவு ஜூலை 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அந்நீதிமன்ற உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரித்ததன் அடிப்படையிலேயே நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்மனுவின் பிரதிவாதிகளாக டியூ குணசேகர மற்றும் கணக்காய்வுக்குழுவின் ஏனைய உறுப்பினர்களும் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
 


Add new comment

Or log in with...