தேர்தலில் பொலித்தீன் வேண்டாம் - ம.சூ.அதிகாரசபை

எதிர்வரும் தேர்தலில், தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் ஏனைய விடயங்களுக்காக பொலித்தீனை பயன்படுத்த வேண்டாம் என மத்திய சூழல் அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களிடம் இவ்வேண்டுகோளை விடுப்பதாக மத்திய சூழல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மசிறி தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரினாலும் எழுத்து மூலமான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...