இலங்கை மற்றும் சீனா இணைந்து கூட்டு இராணுவ பயிற்சியொன்றை இன்று (13) நடாத்தியிருந்தது. மாதுருஓயவிலுள்ள விசேட படைப்பிரிவு பயிற்சி நிலையத்தில் இப்பயிற்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சீனவின் இராணுவ லெப்டினன்ட் கீ கியாங்கின் தலைமையில் 43 உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படையணி மற்றும் விசேட படைப்பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த இராணுவத்தினர் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.
இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சியின்போது ஆயுதக் கையாள்வு, மிக முக்கிய விருந்தினர் பாதுகாப்பு, நேரடி துப்பாக்கிச்சூடு, மெய் பாதுகாப்பு, வாகன தொடரணி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக பயிற்சியில் ஈடுபட்டனர்.
Add new comment