விஜேகுணரத்ன புதிய கடற்படை தளபதியாக தரமுயர்வு

வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயதுங்க இலங்கையின் 20 ஆவது கடற்படைத் தளபதியாக தரமுயர்த்தப்பட்டுள்ளார். நாளை முதல் (11) அமுலாகும் வகையில் இப்பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இவர் முன்னாள் கடற்படை தலைமை அதிகாரியாகவும், முன்னாள் கரையோரப் பாதுகாப்பு பொதுப் பணிப்பாளராகவும் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கிழக்கு கடல் பாதுகாப்பு கட்டளைத்தளபதியாகவும் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை (10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடற்படைத்தளபதியான வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா நேற்று (09) முதல் அமுலாகும் வரையில் அட்மிரலாக தரமுயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


Add new comment

Or log in with...