கடற்படைத் தளபதி ஜயந்த பெரேரா அட்மிரலாக தரமுயர்வு

இலங்கையின் தற்போதைய கடற்படைத்தளபதியான வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா, அட்மிரலாக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

முப்படைகளுக்கு தலைமை வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (09) முதல் அமுலாகும் வரையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜயந்த பெரேரா இலங்கையின் 19ஆவது கடற்படைத்தளபதி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 2014 முதல் அவர் கடற்படைத்தளபதியாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர் 1978 இல் கடற்படையில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Add new comment

Or log in with...